தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கபடுகிறது.

இந்நிலையில் வருகிற 11, 12-ந்தேதிகளில் நடக்கும் இந்த பயிற்சியில் பங்கு  பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, வங்கிக்கடன் பெற்றுக் கொடுக்கவும் வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளது.  ஆகவே பயிற்சி பெற விரும்பும் பெண் தொழில் முனைவோர்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் என்பவர் தெரிவித்துள்ளார்.