இன்றைய செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் டி கே எஸ் இளங்கோவன், இன்று முதலமைச்சர், எங்களுடைய கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுடைய 70-வது பிறந்த நாள். அவர் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மேலும் உறுதியோடு மக்கள் பணியாற்ற துடிப்போடு பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற பணியை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்கான திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகின்றார். நிறைவேற்றி வைக்கிறார்.

மக்களின் அன்பை பெற்ற முதலமைச்சராக அவர் விளங்குகிறார். அவர் பல்லாண்டு வாழ்ந்த தலைவர் கலைஞர் போல சிறந்த ஆட்சியை அவரை மிஞ்சிய ஆட்சியை தரவேண்டும் என கருதுகிறார். அதற்கான வாழ்த்துக்களை கழகத் தோழர் அனைவரும் ஒரே நிலையில் இருந்து அவரை வாழ்த்துகிறோம். பாஜக தேர்தல் நேரத்தில் ஒன்றை செய்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு ஒன்றை செய்வார்கள். தேர்தல் நேரத்தில் ஒன்றை அறிவிப்பார்கள். பொய்யை சொல்லி ஆட்சியைப் பிடித்து பொய் சொல்லி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி இந்தியாவில் இருக்கும் என்றால் அது பாஜகவாக தான் இருக்கும் என பேசியுள்ளார்.