செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, எதிர்க்கட்சியின் ”இந்தியா” கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்குது. எதிர்க்கட்சி கூட்டணியால் ஆளுங்கட்சிக்கு ஒரு பயம். இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய  இதனை சொல்லி,  மக்கள் மத்தியில்…. மத ரீதியில், காழ்ப்புணர்ச்சி உருவாக்குறதுக்காக பண்ணி இருக்கிறாங்க.

இந்து என்ன சொல்லுது ? ”அன்பே சிவம்” தான் சொல்லுது. அதான் சொல்லுறேன்…. மனிதர்களுக்கு மட்டும் அல்ல,  சக ஜீவராசிகளுக்கும் அன்பை செலுத்துவது,  கருணை கொள்வது இது தான் இந்து மதம். அயோத்தியால இருக்குற….  மடாதிபதியார் சொல்லுறாரு. என்ன சொல்லுறாரு ? உதயநிதியுடைய கழுத்தை சீவனும் சொல்லுறாரு. இது என்ன கொடூரம்?

தாலிபன் மாதிரி தான் இது. தாலிபன் ஆப்கானிஸ்தான்ல என்ன பன்றாங்க? பெண்கள் படிக்க கூடாதுன்னு  சொல்லுறாங்க….  பெண்களுக்கு கல்வி கூடாதுன்னு சொல்லுறாங்க…. எதாவது ஒரு மாற்றுக் கருத்து சொன்னா கழுத்த அறுத்துரு சொல்லுறாங்க… அதே தாலிபன் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்து. அதான் சொல்லுறேன்…. இதைத்தான் ”சனாதனம்” என்று சொல்லுகிறோம் என தெரிவித்தார்.