செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்கள்…  சமூக நீதிக்கான திட்டங்கள் அத்தனையுமே இன்னைக்கு குழி தோண்டி புதைத்து விட்டு, அரசுக்கு வருவாய் பயங்கரமா கூடியிருக்கு…. ஆனால் வருவாய் கூடி,  திட்டங்களை நிறுத்திவிட்டு….  இப்ப  பாத்தீங்கன்னா…   புது திட்டங்கள்… எப்படிப்பட்ட கோமாளித்தனமான அரசு ? பாருங்க…. வருவாயும் கூடி,  இருக்கு அரசாங்கத்துக்கு….. திட்டங்களை நிறுத்தியாச்சு…  லேப்டாப்ல 5000 கோடி செலவு பண்ணி இருக்கணும். ரெண்டு வருஷத்துல 2500 +  2500 கோடி செலவு பண்ணி இருக்கனும். ஆனால் கொடுக்கல.

மாணவ – மாணவி  வயித்துல அடிச்சி 2500 கோடியை மிச்சம் பண்ணி இருக்கீங்க தான… இப்போ புது திட்டங்களும் கிடையாது. ஆனால் 2 ½ லட்சம் கோடி இப்போ கடன் வாங்கி இருகாங்க. அப்போ எப்படிப்பட்ட…..    நிர்வாக திறமையற்ற…. கோமாளிதனமான…. லாக்கி இல்லாத….   துப்புக்கெட்ட…. மக்களுக்கு எதுவும் செய்யாத….நன்மை கூட செய்யாத…. மோசமான அரசு, உலகத்திலேயே…  இந்தியாவிலே  சொன்னால் இந்த விடியாத திமுக அரசாங்கம் என சொல்லலாம்..

இது எல்லாம் மக்கள்கிட்ட எடுத்து சொல்லப்படும். இன்னைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு  பெரிய அளவுல ஆதரவு இருக்கு. அதே மாதிரி கடுமையான எதிர்ப்பு அலை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கு…. மக்கள்  எதிர்பாக்குறாங்க தேர்தல் எப்போ வரும், தேர்தல்  வரணும்…  வரணும்னு இருக்காங்க. தேர்தல் வந்துட்டுன்னா…. திமுககாரர்கள்   தொகுதியிக்கு போகவே  முடியாது என தெரிவித்தார்.