1956 ஆம் வருடம் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், இதனால் முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “அண்ணாவைப் பற்றி பேச பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் செல்வது பாத யாத்திரை அல்ல. வசூல் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. ‘நானும் ரவுடிதான்’ என்பது போல அண்ணாமலை செயல்படுகிறார் என ஆவேசமாக பேசியுள்ளார்.