குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுவிட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து மாலையில் திருவனந்தபுரம் மார்க்கமாகவே டெல்லி திரும்புகிறார் குடியரசுத் தலைவர்.