மத்தியபிரதேசம் போபாலில் நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது “வரும் சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பா.ஜ.க-வுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது.

மேலும் வருகிற மக்களவை தேர்தலில் பாஜக பிரச்சனைகளை சந்திக்கும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். பாஜகவிற்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவுக்கு படித்த, தொழில்நுட்பம், அறிவியல் தெரிந்த நபர் பிரதமராக வரவேண்டும் என்று கூறினார்.