இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பிரிவு 80 சி கீழ் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வரி சேமிப்பு காண முதலீடு திட்டங்களில் சேர்ந்து ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கு பெறலாம் என பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரி சேமிப்புக்கான முதலீடுகளை செய்தவர்களுக்கு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்ச் 31-ஆம் தேதி வரை தான் அவகாசம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.