சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளிக்கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது. இந்நிலையில் இறுதி போட்டியில் கே.ஆர் பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே கண்டனூர் பாலையூர் அணியும் மோதிக்கொண்டது.

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமாகி டை பிரேக்கர் வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான 50,001 ரூபாய் மற்றும் வெள்ளிக் கோப்பை என்.எஸ்.கே கண்டனூர் பாலையூர் அணிக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 40001 ரூபாயை கே.ஆர் பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர்.