சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை பணிமனையில் 27-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை.

குறிப்பாக தேவகோட்டையில் இருந்து கோட்டூர் காரை வழியாக வெற்றியூர் நகர பேருந்து இயக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே தரம் குறைந்த நகர பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பேருந்துகளை சரியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.