திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் லட்சுமி நகர் பகுதியில் பாலாஜி என்பவர் பணிபுரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். நேற்று பானிபூரி தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.