திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதனால் வருகிற 25-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காமராஜர் சிலை அருகே இருக்கும் மதுபான கடை ,வேங்கிக் கால் சாலையில் இருக்கும் மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் இருக்கும் மதுபான கடைகள், திருவண்ணாமலை நகரில் தனியார் ஹோட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார்.