தேசிய அளவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சகத்தின் மூலம் கலா உற்சவம் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல் பரதநாட்டியம் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான் கடை வின்ஸ் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள அதிதி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். வருகிற நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான நடன போட்டியில் அதிதி கலந்து கொள்ள உள்ளார்.