மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். பஞ்சர் கடையில் ஊழியராக வேலை பார்க்கும் மோகன்ராஜ் சொந்தமாக கடை வைக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் மோகன்ராஜின் தாயால் பணத்தை கொடுக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன் ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.