காசியாபாத்தில் உள்ள ஒரு மதுபானக் கடையில், இரண்டு போலீசார் ஸ்நாக்ஸ் (தின்பண்டங்கள்) கொடுக்க தாமதமானதால் கடை ஊழியர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த போலீசார் மது அருந்திய பிறகு, ஸ்நாக்ஸ் உடனடியாக வரவில்லை என்ற கோபத்தில் கடை ஊழியர்களை தாக்கினர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#Ghaziabad में खाकी वालों को हो क्या गया है? पुलिस लाइन में तैनात हेड कांस्टेबल और सिपाही मॉडल शॉप की कैंटीन में वेटर से नमकीन लेट हो जाने पर मारपीट की, वहां मौजूद किसी शख्स ने वीडियो रिकॉर्ड कर ली, वीडियो वायरल होने पर HC कपिल और कांस्टेबल विनीत को हिरासत में लिया गया उनका… pic.twitter.com/KOtvVKuQPE
— Lokesh Rai (@lokeshRlive) October 14, 2025
இதையடுத்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீசார் இப்படி நடந்துகொண்டது பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போலீசாரின் நடத்தை குறித்து புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
