தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், முதன்மை கல்வி அலுவலர் விஜயா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகர் மன்ற உறுப்பினர் வாரை, பிரகாஷ் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கண்காட்சியில் மழை நீரை சேகரித்து தானாக வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சும் முறை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நிலங்கள் பற்றியும், தொட்டியில் நீர் தேங்கினால் எச்சரிக்கை விடுக்கும்  எந்திரம், சோலார் தெருவிளக்கு மாதிரி மற்றும் எரிமலை மாதிரி தோற்றம் போன்றவை குறித்து மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.