தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணப்பிரியாவின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குணப்பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.