பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பாபநாசம் அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி வரை பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதில் அஞ்சலக சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு  கணக்கு, குறித்த கால வைப்பு  கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம், முதியோருக்கான சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி திட்டம் ஆகிய சேமிப்புகளில் பொதுமக்களும், அஞ்சலக வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பான் கார்டு நகல், ஆதார் அட்டை உடன் வரவேண்டும். அனைத்து அஞ்சல அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.