திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.