திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மைக்கேல் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டு அதற்காக ஒரு படிப்பில் சேர பெற்றோரிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு பணம் இல்லாததால் படிக்க வைக்க இயலாது என பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மைக்கேல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மைக்கேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.