தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து கிரேன் வாகனம் மூலம் விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.