திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில் இந்தியா வந்தபோது திருமலை கிருஷ்ணன் அவரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் மே மாதம் சென்னையில் இருக்கும்  தனியார் ஹோட்டலுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமலை கிருஷ்ணன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் திருமலை கிருஷ்ணன் கூறினார். மேலும் இளம்பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமலை கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.