விழுப்புரம் மாவட்டத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த் இளைஞரை 28 முறை தலையில் சுத்தியால் அடித்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (22) என்பவரின் நண்பர் கோபி (26) என்பவர் கவுதமின் மாமியார் சசிகலாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதையறிந்த கவுதம், கோபியை எச்சரித்துள்ளார்.

ஆனாலும், கோபி சசிகலாவுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபியின் தலையில் 28 முறை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கவுதமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.