கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி லேஅவுட் அழகு மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை அழகு மீனாட்சி தொடர்பு கொண்டு பேசினார்.

மறுமுனையில் பேசிய மர்ம நபர் பிட்காயினில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அழகு மீனாட்சி 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி எந்த பணமும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அழகு மீனா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.