தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் கிராமத்தில் சோமதுரை- கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக சங்கரன்கோவிலில் இருக்கும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

கடந்த 15-ஆம் தேதி நீட் மையத்திற்கு சென்று வந்த திவ்யா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திவ்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.