திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடி தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜய் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று அஜய் ஜீயபுரத்திலிருந்து அரசு பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அஜய் பேருந்து முத்தரசநல்லூர் ரயில் நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.