சேலம் மாவட்டத்தில் உள்ள கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியில் சின்னண்ணன் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்க்க சென்ற சின்னண்ணன் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

நேற்று அப்பகுதியில் இருக்கும் கிணற்றிலிருந்து சின்னண்ணன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சின்னண்ணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.