சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மகனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த காசி விஸ்வநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசி விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.