திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றார்.

அவர் எதிர்பாராதவிதமாக கோவில் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மணிகண்டனை காப்பாற்றி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.