திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சின்ன கொல்லகுப்பம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சர்மிளா நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மிளா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.