திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆசிம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குடிபோதையில் ஆசிம் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த வீட்டிலிருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆசிம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆசிமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.