டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் 16 பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்ந்த கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு அவரது அறையை சோதனை செய்தனர்.

அங்கு சிறுமி கைப்பட எழுதிய கடிதத்தில் தனக்கு படிக்க விருப்பம் இல்லை என்றும் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகDCP  ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார் சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியதுஅப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.