பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இதை இந்த நூற்றாண்டிலும் கூட மூடநம்பிக்கையாய் தீட்டு என்றும் அந்த நேரத்தில் பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாதவிடாய் சமயத்தில் தனி தட்டு, தனியாக படுக்கை, வீட்டில் எதையும் தொடக்கூடாது, வீட்டிற்குள் வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இன்றளவும் இருந்துதான் வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான பெண் ஒருவர் அவருடைய கிராமத்தில் மாதவிடாய் குறித்து பின்பற்றப்படும் நடைமுறை குறித்து ஒன்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில், அங்கு இருக்கும் கிராமத்தில் மாதவிடாய் வரும் பெண்கள் தனியாக ஊரில் ஒரு மூலையில் வீடு போன்ற ஒரு கட்டிடம். மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனைவரும் அதில் தான் தங்க முடியும். அவர்களுக்கான உணவு மற்றும் மற்ற தேவைகளை உறவினர்கள் எடுத்துக்கொண்டு தூரத்தில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். உணவு கூட தனி தட்டில் தான். அதுவும் ரோட்டில் தான் அமர்ந்து சாப்பிடு வேண்டும்.

இந்த வீடியோ வெளியிட்ட பெண் பெருமையாக பாருங்கள் எங்கள் ஊரில் எவ்வளவு வசதிகள் இருக்கிறது என்பது போல அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். ஆனால் இந்த வீடியோவிற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த காலத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகளை எப்படி பின்பற்றுகிறார்கள் இது தான் நவீன தீண்டாமை என்று இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.