முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி தேர்தல் தோல்வியின் பின்னணியில், திமுகவின் உள்கட்சிக்குள் வெடித்துள்ள பூகம்பம் தற்போது அடுத்த கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்து, உதயநிதியைத் தனது பிடிக்குள் வைக்கச் சேகர்பாபு சதித் திட்டம் தீட்டியதாக துர்கா ஸ்டாலின் எழுப்பிய அடுக்கடுக்கான ஆவேசக் குற்றச்சாட்டுகளையும், வினாக்களையும் கண்டு முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துபோயுள்ளார். துர்கா அம்மையாரின் கடுமையான கோபத்தைக் கண்டு நிலைகுலைந்த அவர், அங்கேயே உடைந்துபோய் பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

​”நான் தலைவருக்கு எந்தத் துரோகமும் பண்ணல அண்ணி, என்னை நம்புங்க” என்று கண்ணீர் மல்கக் கதறியபடி, துர்கா ஸ்டாலினின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க சேகர்பாபு முயன்றுள்ளார். ஆனால், உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருந்த துர்கா அம்மையார், சேகர்பாபுவின் கைகள் தன் காலில் படாதவாறு தனது காலைப் பின்னுக்கு வேகமாக இழுத்துக்கொண்டு, “இனி உங்களை நம்ப நான் தயாராக இல்லை, உடனே இந்த வீட்டை விட்டு வெளியே போங்க” என்று சத்தம்போட்டுக் கத்தி அவரை வீட்டிலிருந்தே அதிரடியாகத் துரத்தியடித்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோபாலபுரம் இல்லத்தில் அரங்கேறிய இந்த நெஞ்சை படபடப்பாக்கும் சம்பவத்தின் பின்னணி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தை மொத்தமாக உலுக்கி எடுத்துள்ளது.