பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம்கள் நம்முடைய பரமவிரோதிகள், கிறிஸ்தவர்கள் நமக்கு பரம விரோதிகள். இவர்கள் இங்கே மதமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் நமக்கு எதிரிகள்.  அதாவது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர். மிக மிக சிறுபான்மையினர். அவர்கள் 70, 80 விழுக்காடாக இருக்கிற இந்துக்களுக்கு எதிரிகள். அவர்களால்….  சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு ஆபத்து என்று ஒரு தவறான கருத்தை RSS விதைக்கிறார்கள்.

எப்படி சிறுபான்மையினரால் பெரும்பான்மையினர் பாதிக்கப்படுவார்கள் ? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 80 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கின்ற இந்துக்கள்,  ஒட்டுமொத்தத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் போன்ற இந்த சமூகங்களை சார்ந்தவர்கள் சிறுபான்மையினர். இவர்களால் பெரும்பான்மையினருக்கு எப்படி பாதிப்பு ஏற்படும் ? ஒரு முஸ்லிம் எப்படி இந்துக்களின் குடிசைகளை கொளுத்தி விட முடியும் ?

ஒரு கிறிஸ்துவன் எப்படி பெரும்பான்மை இந்துக்களை தாக்கி விட முடியும் ? படுகொலை செய்து விட முடியும் ? அதற்கு இந்த சமூக கட்டமைப்பு இடம் கொடுக்காது. வாய்ப்பில்லை…  அதுதான் எதார்த்தமானது. ஆனால் இந்துக்களை மூளை சலவை செய்கிறார்கள்.  முஸ்லிம்களால் நமக்கு ஆபத்து.  எப்படி முஸ்லிம்களால் ஆபத்து ?  முஸ்லிம்கள் தீவிரவாதிகள். எப்படி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் ?அவர்கள் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கட்டுக் கதையாக இருக்கிறது பாருங்கள் என பேசினார்.