உத்வாலா திட்டத்தின் கீழ் நாட்டில் 25 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் பெருமிதம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுக எம்பி கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் பேசினார்.

அவர் பேசியதாவது, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் ஆண்டு வருமானம் ரூபாய்.30 ஆயிரத்துக்கு கீழ் இருக்கிறது. ஆகையால் அவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூபாய்.200-க்கு வழங்க வேண்டும் என்று திமுக எம்பி கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார்.