நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச சிகிச்சை வசதியையும் பெற்று வருகின்றனர்.

இப்போது அந்தியோதயா அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மேலும் ஒரு வசதியை அரசு கட்டாயமாக்கி உள்ளது. அனைத்து அந்த்யோதயா கார்டுதாரர்களுக்கும் இலவச சிகிச்சையளிப்பதற்கு ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் சிறப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கீழ் அந்த்யோதயா அட்டைதாரர் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆயுஷ்மான் அட்டை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.