பாஜகவுக்கு அறியப்படாத நபர்களின் வழியாக 1161 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 2021-22 ஆம் நிதியாண்டில் அறியப்படாத நபர்களின் வழியாக பாஜகவுக்கு‌ ரூ. 1161 கோடி நிதி கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி பாஜக, காங்கிரஸ் மற்றும்‌ CPI உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக 2172 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 1161 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் இது பிற கட்சிகளின் வருமானத்தை விட 53.45 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.