செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு சீர் கேட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பது ஊடகத்தில் தெளிவாக வந்துள்ளது.  எல்லாமே வந்து இருக்கு…. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பேருந்து  டிரைவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் முகத்தை கொடூரமான முறையிலே வெட்டி இருக்கின்றார்கள்.

எந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.  நான் பலமுறை ஊடகத்தின் வாயிலாக… பத்திரிக்கையின் வாயிலாக…. சட்டமன்றத்தில் இந்த செய்தியை சொல்லி இருக்கின்றேன்…. இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு…..  இந்த பொம்மை முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு….  திறமை இல்லா முதலமைச்சர்  இந்த நாட்டை ஆளுகின்ற காரணத்தினால் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாமே உங்கள் தொலைக்காட்சிகளிலும்,  பத்திரிக்கையிலும் வந்து செய்தியை தான் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். ஆகவே இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சி. இந்த ஆட்சி எப்பொழுது போகும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை இந்த விடியா  திமுக அரசுக்கு வழங்குவார்கள்.  திமுக கட்சிக்கு வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.