பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு, அதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி கிடையாது என்று இபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மறைமுகமாக இபிஎஸ்-கு பாஜக வைத்த செக் என்று பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் இபிஎஸ் அணியினர் இறங்கி உள்ளனர். இந்நிலையில் ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது இபிஎஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.