தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மல்லிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இதனால் மல்லிகா அத்தை உறவு முறையான சுமதி என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதி மல்லிகாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து மல்லிகா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மல்லிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தாய் கிருஷ்ணம்மாள், சுமதி மற்றும் உறவினர் முனியாண்டி ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.