கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் ரகுபதி சில நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், சில நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் வசித்து வந்துள்ளார்.

சமீப காலமாக திவ்யபாரதி ரகுபதியிடம் முதல் மனைவியின் வீட்டிற்கு செல்லக்கூடாது என கூறியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே ரகுபதி தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆந்திரா சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்ய பாரதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யா பாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.