விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.