கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெங்கடேசனுக்கும், தாய்மாமன் மகளான கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா தனது தாய் மகேஸ்வரியுடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் வெங்கடேசன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு கிருத்திகா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் தனது தாத்தா தங்கவேலின் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.