விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியல் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.