ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் இலந்தக்குட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பிறகு ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரங்கசாமி நீண்ட நேரமாகும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ஜீவா நகர் பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ரங்கசாமியின் உடல் மிதந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ரங்கசாமி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைப்பதற்காக அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். ஆனாலும் அவரால் கடனை அடைக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.