திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டியில் விவசாயியான மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் அமரபூண்டி-ஆயக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்குவார்பட்டி அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மாயவன், விஜயலட்சுமி, காரை ஓட்டி வந்த மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.