சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சந்தோஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.