சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம் தேதி நாகமணி மும்பைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தன்னிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை கொடுத்து 7 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு புதிய தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து கடை ஊழியர்கள் நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது அவை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அன்னதானப்பட்டி போலீசாரின் உதவியுடன் நாகமணியை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.