திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.புதுபட்டி நடுத்தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளிதரன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முரளிதரன் கல்லூரியிலிருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் முரளிதரன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் முருகேசன் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முரளிதரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.